தருமபுரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 13 புதிய பேருந்து சேவை தொடக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 13 புதிய பேருந்துகளின் சேவையை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். புதிய பேருந்துகள், சென்னை, பெங்களூரு, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

முன்னதாக அமைச்சர் கே.பி.அன்பழகன், புதிய பேருந்தை சிறிது தூரம் இயக்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version