PSLV C-47 ராக்கெட்டில் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைகோள்கள்: இஸ்ரோ சிவன்

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டில் கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டில் அனுப்பப்படும் இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கை கோளானது, 3ம் தலைமுறை நவீன செயற்கை கோள் எனவும், துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். கார்டோசாட்-3 செயற்கைகோள் பூமியிலிருந்து 509 கி.மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான இறுதிகட்டப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்துள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version