மும்பை கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ; 13 நோயாளிகள் பலி

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான வசாயிலுள்ள விஜய் வல்லப் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகள் 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இன்று காலை 3.15 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அறை முழுவதும் தீ பற்றி எரிந்ததை அடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும், கட்டடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவலை கிடமாக உள்ள 21 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நாசிக்கில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version