13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நாளை தொடக்கம்

ரஷ்யா, ஈரான் உள்பட 13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பூகோள ஆராய்ச்சி அமைப்பு இணைந்து நடத்தும் 3 நாள் மாநாடு, டெல்லியில் நாளை துவங்க உள்ளது. இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர முன்னாள் பிரதமர்கள், சபாநாயகர்கள் என மொத்தம் 105 நாடுகளை சேர்ந்த 180 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய், சுவீடன், கனடா, டென்மார்க், நியூசிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் பிரதமர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவீது ஷரீஃபும் இதில் கலந்து கொள்கிறார்.

Exit mobile version