12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்தது : மாணவ, மாணவிகள் உற்சாகம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததையடுத்து, பள்ளி வாழ்க்கை நிறைவடைந்ததை மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். கணிதம், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களை தவிர மற்ற தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று நிறைவடைந்தது. பள்ளி வாழ்க்கை நிறைவடைந்ததை மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

விடைத்தாள் திருத்தும் பணி வரும் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பின்னர், தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version