பீகார் மாநிலத்தில் 129 பேர் மூளைக்காய்ச்சல் நோயில் உயிரிழப்பு

பீகாரில் மூளைக் காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

பீகார் மாநிலம், முசாபர்பூர் மற்றும் கயா மாவட்டங்களில் குழந்தைகள் பெருமளவு மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மூளைகாய்ச்சல் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக இருந்த நிலையில் தற்போது, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கோடை வெப்பம் காரணமாக, நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. முசாபர்பூர் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த நோயினால் அனுமதிக்கப்பட்ட 109 பேரும், மற்றொரு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 பேரும் தற்போது உயிரிழந்துள்ளனர். எனவே, பீகார் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version