மதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1250 மாடுகள் பங்கேற்பு

மதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 250 மாடுகள் மற்றும் 720 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே கரடிக்கல் கிராமத்தில் 280-ஆம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர் மற்றும் வட்டாச்சியர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை துவங்கி வைத்தனர். இப்போட்டியில் 1250 காளைகளும், மற்றும் 720 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் சீறிபாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் வீரத்துடன் அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாட்டை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

Exit mobile version