750 காளைகள்,450 காளையர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சை அருகே மாதா கோட்டையில் ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தஞ்சையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி தஞ்சை அருகே மாதா கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கிவைத்தனர். இந்த போட்டியில் 750 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Exit mobile version