பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 மூட்டை ஆற்று மணல் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆற்றோரப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.  அப்போது 120 மூட்டைகளில் மணல் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து மணல் மூட்டைகளை கைப்பற்றிய வருவாய்த்துறையினர், மணல் கடத்தல் குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Exit mobile version