சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 12 காட்டுயானைகள்

ஒசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 12 காட்டுயானைகள் ஆந்திர மாநிலத்திலுள்ள, குடகப்பள்ளி என்னுமிடத்தில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சானமாவு வனப்பகுதியிலிருந்து 12 காட்டுயானைகள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செட்டிப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது. இந்த யானைக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகாராஜாகடை பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்நிலையில் அங்கிருந்த யானைகள் தற்போது ஆந்திரம் மாநிலம் குப்பம் அருகேயுள்ள குடகப்பள்ளி என்னுமிடத்தில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Exit mobile version