கோவையில் ஊருக்குள் புகுந்த 12 காட்டு யானைகள்- மக்கள் அச்சம்

கோவை சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து வருகின்றன. இதனிடையே சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version