ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 12 காட்டுயானைகள்

ஒசூர் அருகே சுற்றித்திரியும் காட்டுயானைகளைக் காட்டுக்கு விரட்டிப் பயிர்களைக்காக்க வேண்டும் வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள சானமாவு காட்டுப்பகுதியிலிருந்து 3 குட்டிகளுடன் வெளியேறிய 12 காட்டுயானைகள் அருகிலுள்ள குக்கலப்பள்ளி, பன்னப்பள்ளி, பிள்ளைகொத்தூர் ஆகிய ஊர்களில் சுற்றித்திரிந்தன. பிள்ளைகொத்தூரில் நெல், புதினா தோட்டங்களைச் சேதப்படுத்தி விட்டு அங்குள்ள மாந்தோப்பில் முகாமிட்டுள்ளன. பிள்ளைகொத்தூர், சப்படி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் நெல், கேழ்வரகுப் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. இதனால் காட்டுயானைகளை விரட்டிவிட்டுப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version