12 ஆடுகளை கடித்து குதறிய மர்ம வன விலங்கு எது?

கோபிச்செட்டிபாளையம் அருகே 12ஆடுகளை கடித்து குதறிய வன விலங்கின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டுவன்புதூர் பகுதியில் ரவி என்பவரின் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இவரது தோட்டத்தில் புகுந்த வன விலங்கு , 12 ஆடுகளை கடித்து குதறியிருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஆடுகளை கடித்து குதறிய வன விலங்கின் பற்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் வன விலங்கின் நடமாட்டம் குறித்து கண்டறிய கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version