13 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வட்டமலை பகுதியில் வசித்து வந்த விசைத்தறி தொழிலாளியின் 13 வயது மகளே, கடந்த பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

விசைத்தறி தொழிலாளின் மூத்த மகளின் கணவர் சின்ராஜ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை தொடர்ந்து சின்ராஜின் நண்பர்கள் குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லையை தாங்க முடியாமல் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சிறுமி தனது தயாரிடம் கூறி இருக்கிறார். இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடம் சிறுமியின் தாயார் பஞ்சாயத்து பேசி 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு பிரச்னையை முடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வட்டமலையில் இருந்து குடும்பத்துடன் காலி செய்த அவர்கள் குமாரபாளையம் மேட்டுக்காடுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

அங்கு சிறுமியை கண்ணன் என்பவரின் வீட்டு வேலைக்கு அவரது தாய் அனுப்பி இருக்கிறார். அங்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து இருக்கிறது.

குமாரபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக இருக்கும் கண்ணன் அவரின் நண்பர்கள் பன்னீர்செல்வம், நாய் சேகர், அபிமன்னண், கோபால கிருஷ்ணன், சங்கர், சரவணன் அகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து குழந்தை நல அலுவலர் ரஞ்சித பிரியா சிறுமியை மீட்டு விசாரணை நடத்திய இருக்கிறார்.அதில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 பேர் மற்றும் வன்கொடுமைக்கு துணைபோன சிறுமியின் தாயார் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய முன்கன் என்பவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல்லில்13 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version