ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 12 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 12 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஊத்துகுளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஜெயகுமார் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து அதனை மொடகுறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 3 லட்சம் ரூபாய் பணம் உட்பட மொத்தம் 12 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version