11வது மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் இளைஞர் ஒருவர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

வாலிபாளையத்தில், அமெச்சூர்ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மிஸ்டர் திருப்பூர் 2019க்கான ஆணழகன் போட்டி நடைப்பெற்றது. இந்த ஆணழகன் போட்டியில் பல்லடம், உடுமலை, அவினாசி, உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருநூறுக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 9 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் உடலை கட்டு கோப்பாக வைத்திருந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜா என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கருப்பசாமி என்பவர் இரண்டாம் இடம் பிடித்தார்.

Exit mobile version