ஜோத்பூரில் ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் 11 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில், புதுமண தம்பதியர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜோத்பூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள ராம் தியோரா கோயிலுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். செர்கா என்னும் இடத்தின் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி ஜீப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் முற்றிலுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் புதுமண தம்பதியர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு, முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version