11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி காந்திராஜன் தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். புதிய டிஜிபியாக ஸ்ரீலட்சுமி பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வ நாகரத்தினம் கடலோர காவல்படை எஸ்பியாக ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட டிஐஜியாக பாலகிருஷ்ணனும், சென்னை கிழக்கு காவல் ஆணையராக வனிதாவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். நெல்லை மாநகர காவல் ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Exit mobile version