கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற 11 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version