11 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – ஊர்காவல்துறை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 24ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் 11 மீனவர்களையும் நிபந்தைனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version