தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, வரும் 27ம் தேதி தொடங்கிவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் எனவும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

Exit mobile version