நாகையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 1000 டன் சம்பா நெல்

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் சம்பா நெல், ரயில் வேகன்கள் மூலம் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடி மூலம் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக நாகப்பட்டிணம் மாவட்டம் முழுவதும் 282 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன . இந்த ஆண்டு இதுவரையில், 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் அரவை செய்வதற்காக, ரயில்கள் மற்றும் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன்படி நாகப்பட்டினம், காடம்பாடி,சன்னமங்கலம் சாட்டியக்குடி, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் சம்பா நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம், சென்னைக்கு அனுப்பப்பட்டன.

Exit mobile version