100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட இந்திய வரைபடம்

மக்களவை தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரமாண்ட அளவில் இந்திய வரைபடம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து தரப்பு வாக்காளர்களிடமும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் மகளிர் திட்டம் சார்பில் 3 ஆயிரம் சதுரடி அளவில் மிக பிரம்மாண்டமான இந்திய வரைபடம் வரையப்பட்டு, 100 சதவிகிதம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி கலந்துகொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 

Exit mobile version