நெல்லை அருகே 100 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

நெல்லை அருகே உள்ள வடக்கன்குளத்தில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தில் சங்கு நகரில் கல்லூரி பேராசிரியர் விபின் என்பவர் வசித்து வருகிறார். விபின் தனது மாமியாரின் வீட்டிற்குச் சென்று திரும்புகையில், வீட்டின் கேட் உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்நுழைந்து பார்த்தபோது, 100 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் பணம் ஆகியவை திருடிபோயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விபின் கொடுத்த புகாரின்பேரில் போலீசாரும், கைரேகை நிபுணர்களும் திருட்டுச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version