100 சதவிகிதம் இருக்கைகளை நிரப்பி பேருந்துகளை இயக்கலாம் – தமிழக அரசு!

பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பி இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் 60 சதவிகித இருக்கைகளை மட்டும் நிரப்பி, குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று வெகுவாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை 100 சதவிகித இருக்கைகளை நிரப்பி இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகள், கல்வி நிறுவன பேருந்துகளிலும் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவை கருதி மாநில போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Exit mobile version