முதலமைச்சர் உத்தரவின்பேரில் 100 பேருக்கு ஜாதிச்சான்றிதழ்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் மலைக்குறவர், இருளர் இனத்தவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழுக்காக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். அவரின் உத்தரவையடுத்து மலைக்குறவர், இருளர் இனத்தவர் 100 பேருக்கு தற்போது ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்களின் 20 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சான்றிதழ் கிடைத்த அவர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version