பணம் இல்லாததால் கட்சி தொண்டரை விரட்டியடித்த வைகோ

பணம் இல்லாவிட்டால் தொண்டருக்கு அனுமதியில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது நகர கழகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தொண்டர்கள் வைகோவிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வரிசையாக அனைவருடனும் போஸ் கொடுத்த வைகோ, தொண்டர் ஒருவரிடம் பணம் இல்லாததால், புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அவரை விரட்டியடித்ததால், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வைகோ மீது கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

Exit mobile version