பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக மேயர் பங்காளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நினைவிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version