10% இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது

பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version