புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்றனர்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.

உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளின் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர். முதலாவதாக, நீதிபதி கோவிந்த ராஜுலு சந்திரசேகரனுக்கு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நக்கீரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியம், கண்ணம்மாள், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version