மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ,396 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10, 396 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 10 ஆயிரத்து 31 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10, 396 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 116 .90 அடியாகவும், நீர்இருப்பு 88. 611 டி.எம்.சியாகவும் உள்ளது.

அதே நேரம், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 12000 கன அடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 62வது நாளாக அருவியில் குளிக்கவும், 5வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version