திருவட்டார், கடற்கரை கிராமங்களில் இயந்திரப் பழுதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியம் மற்றும் கடற்கரை கிராமங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் ஒரு மணி நேரம் வாக்களிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார், செருப்பாலூர், கிள்ளியூர் பகுதிகளிலும், கடற்கரை கிராமங்களான தூத்தூர், பூத்துறை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வாக்குபதிவு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது.

Exit mobile version