தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.58 லட்சம் பேர்!

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையினர் 1 லட்சத்து 5 ஆயிரம் பேரும், காவல்துறை அல்லாத 34 ஆயிரத்து 130 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் 6 ஆயிரத்து 350 பேர் உட்பட மொத்தம் 18 ஆயிரத்து 761 பேரும் பாதுகாப்பு பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம், 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version