பொங்கல் சிறப்பு பேருந்து : 1.45 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம்

பொங்கலையொட்டி 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர் என்று தெரிவித்த அவர் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version