கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1, 368 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 368 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, 1,368 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 41. 82 அடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் 4வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Exit mobile version