ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விட்டு, விட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையால், நீர்நிலைகள் உயர்ந்து வருகின்றன.

Exit mobile version