விருதுநகர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் : 300 மாணவர்கள் போட்டியில் பங்கேற்பு

விருதுநகரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விருதுநகரில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான  இந்த போட்டியில், 21 வயதுக்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

Exit mobile version