விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் – 144 தடை உத்தரவு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து செங்கோட்டை தாலுக்காவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்றிரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வழக்கமான பாதையில் ஊர்வலம் நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக, செங்கோட்டை தாலுக்காவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, நாளை மாலை வரை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version