ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கவிதை வாசித்து பாராட்டைப் பெற்ற மாணவர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கவிதை எழுதி வாசித்து அனைவரின் பாராட்டுத்தலையும் பெற்றுள்ளார்.

அழகாபுரி கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவர் மாதவன், 6 ஆம் வகுப்பு முதல் அதிமுக பொதுக்கூட்ட மேடைகளில் அனைவரையும் கவரும் வகையில் பேசி வருகிறார். இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி பிறந்தநாள் கவிதை ஒன்றை மாணவர் மாதவன் இயற்றியுள்ளார். இந்த கவிதையை வாசித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Exit mobile version