வரும் 30ம் தேதி மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அதிவேக இணையதள சேவையை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. மாறன் சகோதரர்கள் உட்பட ஏழுபேர் மீதான இந்த வழக்கில், அவர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தர விட்டது. இந்த நிலையில், ஏழு பேருக்கு எதிராக வரும் 30ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Exit mobile version