ரபேல் கொள்முதலை ஆய்வு செய்யுங்கள் – சிஏஜியிடம் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

 

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய சிஏஜியிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷியை காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு, இன்று நேரில் சந்தித்தது.
அவரிடம் , ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விரிவான தணிக்கையை மேற்கொள்ள சிஏஜியிடம் காங்கிரஸ் வலியுறுத்தியது.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே செப்டம்பர் மாதம் 19-ம் தேதி சிஏஜியை சந்தித்து தன்னுடைய வலியுறுத்தலை முன்வைத்தது. இப்போது இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பில் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான ஒப்பந்தம் தொடர்பான புதிய தகவல்களை காங்கிரஸ் கட்சி சமர்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஊழல் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழலாக வெளிப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அக்கட்சி, ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளது.

Exit mobile version