மோடி பதில் சொல்ல வேண்டும் -ப.சிதம்பரம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் வங்கி விதிமுறைகளை மீறி பல்வேறு தொழிலதிபர்களுக்கு பெரும் தொகைகள் கடனாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் மோசமாகிவிட்டதாக கூறும் பிரதமர் மோடி, மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் வழங்கப்பட்ட கடன்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், வாராக் கடன்களுக்கு காங்கிரஸ் தான் என்றால் அந்த கடன்களை வசூலிக்காமல், அந்த நபர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version