மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இருநாட்டு நல்லுறவு குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது சுற்றுப பயணத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்த ரணில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version