மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையில் விடிய, விடிய மழை

வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது, வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version