முதலில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடத்த முடிவு

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முடிவடைகின்றன. இந்த மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி சட்டசபையை கலைத்தது. இது குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்கான சூழல்கள் குறித்து ஆராய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 4 மாநில தேர்தலுக்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Exit mobile version