ஜனவரியில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்

தெலுங்கானா சட்டப் பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சட்டப் பேரவையை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலைத்தார். இதற்கு ஆளுநர் நரசிம்மனும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் சந்திரசகர் ராவ் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால், தெலுங்கானா சட்டசபை அடுத்த ஆண்டு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version