முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 16-ம் தேதி பாராட்டு விழா

விளையாட்டுத்துறையை ஊக்குவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 16-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் , கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு வேலை வாய்ப்பில் 2% இடங்கள் விளையாட்டுத்துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறினார். இதற்காக அவருக்கு வரும் 16 ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று அவர் கூறினார். தமிழக உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை சிறப்பான செயல்பாட்டிற்காக விருது பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version