திமுக்விலிருந்து விலகி திரளாக வந்து அதிமுகவில் இணைந்தனர் புதிய தொண்டர்கள்!

திமுகவில் இருந்து விலகிய ஏராளமானோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்…

கொங்கணாபுரம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பி.வி.கருப்பு வைரம் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்…மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அதிமுகவில் நாள்தோறும் ஏராளமானோர் புதிதாகவும், மாற்றுக்கட்சியில் இருந்தும் விலகி தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பிவி. கருப்பு வைரம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெங்கடேசன், ராஜாமணி, பிரகாஷ், கருப்பண்ணன், அரசு உள்ளிட்ட ஏராளமானோர் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி, கொங்கணாபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் பழனிசாமி, கோரணம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version