முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பெங்களூரு சென்றார் துணை முதலமைச்சர்

பெங்களூருவில் இன்று நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று தொடங்குகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு தென் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு விமானம் மூலம் பெங்களூரு சென்றார்.

வளர்ச்சி பணிகள், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

Exit mobile version