மலேசியாவில் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், சாய் மார்ஷ்ல் ஆர்ட் கராத்தே வீரர்கள் 11 பேர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன் போட்டியில் சேலம் அணி சார்பில் பங்கேற்றனர்.

7 முதல் 14 வயது பிரிவினருக்கான போட்டியில் 6 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற கராத்தே வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version